Wednesday, December 16, 2009

வதைக்கும் உன் ஞாபகங்களை


சதா உன் ஞாபகங்கள்

மனதுக்குள் மழை பெய்து கொண்டிருக்கிறது

சமயங்களில் தடுமாறி கண்களில் வழிகிறது

என் எராளமான ஆசைகள்

உன் இமை சிறகடிப்பில்

தொங்கிக்கொண்டு இருக்கிறது

வதைக்கும் உன் ஞாபகங்களை

சுமந்து கொண்டு சாகவும் முடியாது

எல்லவாற்றையும் கொட்டி விடுவேன்

நீண்ட ஒரு பாதையில்

நீ நடந்து வருவாய்

உன்னோடு கூட மாலையோடு ஒருத்தி

உன் கழுத்திலும் மாலை

கண்ணீர் வழிய நிற்கிறேன்

அருகில் நீ கடக்கயில் தலை குனிந்து கொள்கிறேன்

அது தவிற என்ன செய்ய இயலும் .........................

ஊமையாய் நான் .......................

என் கனவாய் நீ........................


அன்புடன்
சதீஷ்குமார்

1 comment:

  1. "ஊமையாய் நான் .......................

    என் கனவாய் நீ........................ "

    இதயத்தில் இடி கண்ணில் மழை !

    ReplyDelete