Wednesday, December 2, 2009




உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…
காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின் அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…



மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…


ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த
முதல் பூவாய்…


என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….

2 comments: