Monday, February 1, 2010


நீ
மஞ்சள் சுடிதாரில்
என்னைக் கடந்து
செல்கிறாய்.
என்னைப்
பார்த்து
ஒரு குழந்தைக்
கேட்கிறது
“ஏன் இந்த வானவில்லுக்கு
மட்டும் ஒரெ வண்ணம்?”

மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்
.ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைகுப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.

உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..

"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .

ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தப்படியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..

Thursday, January 21, 2010

அவளின் காதல் கதை...
தட்டிலிருந்து தவறி விழும்
இறைச்சிக்காக
சுற்றிவரும் நாயின் நாக்கில்
டிராகனின் உக்கிரம் -
அவன் காதல்.

வேதாளத்தின் விடுகதைக்கு
விடை சொல்லபோய்
பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை

காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
வன்புனர்கிறது -
மலைபாம்பு

குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை;
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...
திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...

அணையும் தருவாயிலிருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் இட்டு
திரியை தூண்டுகிறாள்
சிறுமியொருத்தி...

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்

எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்